திருமணத்திற்கு வற்புறுத்திய காதலிக்கு நடுரோட்டில் மரண பயம் காண்பித்த காதலன்.. வீட்டை தரைமட்டமாக்கிய அதிகாரிகள்.!
திருமணத்திற்கு வற்புறுத்திய காதலிக்கு நடுரோட்டில் மரண பயம் காண்பித்த காதலன்.. வீட்டை தரைமட்டமாக்கிய அதிகாரிகள்.!
மத்திய பிரதேச மாநிலத்தின் ரிவா மாவட்டம் மம்கஞ்ச், தாரா கிராமத்தைச் சேர்ந்தவர் பங்கஜ் திருப்தி (வயது 24). இவர் அதே பகுதியில் வசித்து வரும் 19 வயதுடைய இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் கடந்த புதன்கிழமை அன்று தங்கள் ஊருக்கு நடந்து சென்று கொண்டு இருந்துள்ளனர். இருவரும் பேசிக்கொண்டே போகும்போது அந்த இளம்பெண் தன்னை விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று காதலனிடம் கூறியுள்ளார்.
இதனிடையே இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காதலன், காதலியை கீழே தள்ளி அடித்து, உதைத்து தான் போட்டு இருந்த ஷு காலால் எட்டி உதைத்துள்ளார்.
இதில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதைப் பார்த்து பயந்த அந்த காதலன் அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி இருக்கிறான்.
அந்த வழியாக சென்ற ஒருவர் இந்த சம்பவத்தை தன்னுடைய செல்போன் மூலம் வீடியோ எடுத்து அதை இணையத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இதனால் விவகாரம் காவல்துறையினர் கவனத்திற்கு சென்றதைத்தொடர்ந்து, அதிகாரிகள் உத்திரபிரதேசத்தில் வைத்து பங்கஜை கைது செய்தனர்.