42 வயதில் இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்த தமிழ் சீரியல் நடிகை; குவியும் வாழ்த்துக்கள்.!
17 வயது சிறுமி 6 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. காட்டுப்பகுதிக்குள் கடத்தி சென்று பயங்கரம்..!
![Madhya Pradesh 17 Aged Minor Girl Gang Raped](https://cdn.tamilspark.com/large/large_gang-rapped-47094.jpg)
கடைவீதிக்கு சென்ற சிறுமி 6 பேர் கும்பலால் கடத்தப்பட்டு காட்டுப்பகுதிக்குள் வைத்து பலாத்காரம் செய்யப்பட்ட துயரம் நடந்துள்ளது. விசாரணைக்கு பின்னர் காம கொடூரர்களின் வீடுகளை காவல் துறையினர் புல்டவுசரால் தரைமட்டமாகிய சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில்உள்ள அஷ்டபுஜி கோவில் பகுதியில் 17 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி தனது வீட்டில் இருந்து புறப்பட்டு கடைவீதிக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்புகையில், 6 பேர் கும்பல் சிறுமியை கடத்தி சென்றுள்ளது.
இவர்கள் வசித்து வரும் பகுதி மலைப்பாங்கான பகுதி என்பதால், அஷ்டபுஜி கோவிலுக்கு பின்புறமுள்ள வனப்பகுதிக்கு சிறுமியை கடத்தி சென்ற கும்பல், அங்கு கூட்டாக சேர்ந்து அவரை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செத்துள்ளது. பின் இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவோம் என மிரட்டி சென்றுள்ளது.
இதனால் பதறிப்போன சிறுமி கயவர்களின் அத்துமீறலால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு பெற்றோரிடம் தனக்கு நேர்ந்ததை கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அவர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கியுள்ளனர். இந்த விஷயம் சமூக ஆர்வலர்கள் வாயிலாக காவல் துறையினரின் காதுகளுக்கு சென்றுள்ளது.
இதனையடுத்து, சிறுமியின் பெற்றோரை சந்தித்த காவல் துறையினர் அறிவுரை வழங்கி புகாரை பெற்றுக்கொண்டனர். இதன்பின், விசாரணை நடத்தி ஜுனைட், சுஹைல், ஹரிமுதீன், ஆரிப், ஹபிஸுர் ரஹ்மான், சோட்டு கெளதம் ஆகியோரை கைது செய்தனர். இவர்களில் 2 பேர் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கில் தொடர்புடைய 3 குற்றவாளிகளின் வீடுகள் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டு இருப்பதும் காவல் துறையினரின் விசாரணையில் அம்பலமாக, அதிகாரிகள் புல்டவுசரோடு புறப்பட்டு சென்று காமுகர்களின் இல்லத்தை நொறுக்கி செங்கல் தூசிகளை அவர்களுக்கு மிச்சமாக வைத்துவிட்டு வந்தனர்.