ஒரே பள்ளியை சேர்ந்த 90 மாணவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு.. கேரளாவில் பேரதிர்ச்சி சம்பவம்.. வயிற்றுப்போக்கால் அவதி.!

ஒரே பள்ளியை சேர்ந்த 90 மாணவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு.. கேரளாவில் பேரதிர்ச்சி சம்பவம்.. வயிற்றுப்போக்கால் அவதி.!



kerala-90-students-admit-noro-virus

 


கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டம், லகிடி ஜவஹர் நவோதயா பள்ளியில் பயின்று வரும் 90 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீரென உடல்நலகுறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி அனுமதி செய்யப்பட்டனர். 

இவர்களுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்த நிலையில், இவர்களுக்கு மொத்தமாக உடல்நலக்குறைவு ஏற்பட காரணம் என்ன என விசாரிக்கப்பட்டது. 

KERALA

மருத்துவமனை (File Photo)

மேலும், அம்மாநில சுகாதாரத்துறையினர் மாணவர்களின் இரத்த மாதிரிகளை சேகரித்து ஆழப்புலா வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பிவைத்தபோது, அவர்களுக்கு நோரோ என்ற வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது உறுதியானது. 

இவர்களுக்கு நோரோ வைரஸ் பரவ காரணமாக குடிநீர் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அப்பள்ளியில் இருக்கும் கிணறுகளை குளோரினேஷன் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.