திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளையின் விபரீத செயல்.. கண்ணீரில் கதறிய மனைவி.. நடந்த சோகம்.!



Karnataka Ramanagar Man New Married Suicide

வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இன்பமாய் இருந்த புதுமாப்பிள்ளை 6 மாதத்தில் தூக்கில் தொங்கிய சோகம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகர் மாவட்டம், சென்னபட்டனா பைரப்பாட்டனா கிராமத்தில் வசித்து வருபவர் சரத் (வயது 27). இவருக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகின்றன. 

திருமணம் முடிந்த புதிதில் தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த நிலையில், சமீப காலமாக சரத் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். 

இந்த நிலையில், நேற்று திடீரென சரத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளவே, வெளியே சென்ற மனைவி வீட்டிற்கு வந்து கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

பின்னர், இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.