"யாருக்கு ஓட்டு போடனும்.?" மரியான் பட நடிகையின் வைரல் பதிவு.!
மனைவியை பிரசவத்திற்கு அனுப்பிவிட்டு, சிறுமியை மசக்கையாக்கிய கொடூரம்..! சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்.!!
மனைவியை பிரசவத்திற்கு அனுப்பிவிட்டு, சிறுமியை மசக்கையாக்கிய கொடூரம்..! சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்.!!
தனது மனைவியை பிரசவத்திற்கு அனுப்பி வைத்த கணவன், மனைவியின் அக்கா மகளை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய கொடூரம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர், நன்ஜன்கூடு ஹாரெபுரம் கிராமத்தை சார்ந்தவர் பிரதீப் (வயது 26). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி உள்ள நிலையில், கர்ப்பமான மனைவியை பிரசவத்திற்காக தாயின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். பிரதீப்பின் வீட்டிற்கு மனைவியுடைய அக்கா மகளான, இளம் சிறுமி அவ்பது சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், பிரதீப்பிற்கு சிறுமியின் மீது மோகம் ஏற்பட்டு, சிறுமியை கட்டிபிடித்தவாறு செல்போனில் புகைப்படம் எடுத்து, இந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி, பிரதீப் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி மானத்துக்கு பயந்து அதனை வெளியே சொல்லாமல் இருந்துள்ளார்.
இதனை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்ட பிரதீப், சிறுமியை அவ்வப்போது வீட்டிற்கு அழைத்து பாலியல் வல்லுறவு செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமான நிலையில், சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை அழிக்கவும் பிரதீப் திட்டமிட்டுள்ளார். நேற்று முன்தினம் சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பிரதீப், கருக்கலைப்பு செய்ய முயற்சித்துள்ளார்.
ஆனால், மருத்துவர்கள் சிறுமியின் வயது குறித்து விசாரணை செய்கையில், உண்மையை சிறுமி மருத்துவர்களிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மருத்துவர்கள் பிலிகெரே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மருத்துவர்களின் நடவடிக்கையை பார்த்து சுதாரித்துக்கொண்ட பிரதீப், தனது வீட்டிற்கு சென்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். உயிருக்கு போராடிய பிரதீப்பை மீட்ட அக்கம் பக்கத்தினர், மைசூர் கே.ஆர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தகவல் அறிந்த காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரதீப் குணமடைந்ததும் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள சிறுமி காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.