இலட்சியத்துடன் வாழ்ந்த பெண்ணை காதலிப்பதாக வற்புறுத்தி கொலை; பெங்களூரில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

இலட்சியத்துடன் வாழ்ந்த பெண்ணை காதலிப்பதாக வற்புறுத்தி கொலை; பெங்களூரில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!



Karnataka Bangalore Love Girl Killed by Boy Friend 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் கிரிஷ் (வயது 35). இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கொல்கத்தாவை சேர்ந்த பரிதா காட்டுன் (வயது 42) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் சபாவில் வேலை பார்த்து வருகிறார். 

பெண்ணுக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் இருக்கின்றனர். கிரிஷ் - பரிதா நட்பாக பழகி வந்த நிலையில், ஒருசமயத்தில் கிரிஷ் பரிதாவின் மீது காதல் வயப்பட்டுள்ளார்.  

தனது காதலை பலமுறை பெண்ணிடம் வெளிப்படுத்தியும், அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நட்பாக மட்டுமே தான் பழகுவதாகவும் கூறியுள்ளார். தனது வாழ்நாளில் நான் வெற்றியடைய வேண்டும் என்பதால், குழந்தைகள் இருப்பதால் அதுவே எனக்கு முக்கியம் என்றும் நிலையை எடுத்துரைத்துள்ளார். 

இதனை ஏற்றுக்கொள்ளாத கிரிஷ் தொடர்ந்து பெண்ணை வற்புறுத்திய நிலையில், சம்பவத்தன்று மீண்டும் தனது காதலை தெரிவித்துள்ளார். அப்போது பெண் ஏற்றுக்கொள்ள மறுக்க, இறுதியில் அவர் 15 முறை பரிதாவை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார். விசாரணைக்கு பின்னர் கிரிஷ் கைது செய்யப்பட்டார்.