மின்கசிவால் நடுரோட்டில் வெடித்து சிதறிய ஆம்புலன்ஸ்; நோயாளி பரிதாப பலி..!

மின்கசிவால் நடுரோட்டில் வெடித்து சிதறிய ஆம்புலன்ஸ்; நோயாளி பரிதாப பலி..!



Karnataka Aged Women Died Mumbai Pune Expressway Ambulance Blast 

 

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நிலாபாய் காவல்டர் (வயது 74). இவர் உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். 

பின் அங்கிருந்து சொந்த ஊர் செல்ல அவசர ஊர்தி உதவியுடன் பெங்களூர் நோக்கி பயணித்துக்கொண்டு இருந்தார். 

அவசர ஊர்தியில் ஆக்சிஜன் சிலிண்டர் சுவாசம் பொறுத்தப்பட்டவாறு பயணித்த நிலையில், இவர்களின் வாகனம் மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது விபத்தில் சிக்கியுள்ளது. 

அப்போது, திடீரென மின்கசிவு ஏற்பட்டு ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததாக கூறப்படும் நிலையில், நிலாபாய் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.