எழுத்து தேர்வே இல்லாமல் ரயில்வேயில் சூப்பிரவைசர் வேலை! யாரும் மிஸ் பண்ணிடாதிங்க!

எழுத்து தேர்வே இல்லாமல் ரயில்வேயில் சூப்பிரவைசர் வேலை! யாரும் மிஸ் பண்ணிடாதிங்க!


job in indian railway


இந்தியன் ரயில்வே (ஐ.ஆர்.சி.டி.சி) நிறுவனத்தின் தெற்குமண்டலத்தில் சூப்பிரவைசர் ஹாஸ்பிடாலிட்டி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு மொத்தம் 74 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

தகுதி:
B.sc hospitality and hotel administration, food and beverage நிறு வனத்தில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், இந்த பணிக்கான நேர்காணலில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:
இந்த பணிக்கான விண்ணப்பதாரர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் 11-ஆம் தேதியும், பெங்களூருவில் 13-ஆம் தேதியும், சென்னையில் 15-ஆம் தேதியும் நேர்காணல் நடக்கிறது. தேவையான சான்றுகளை நேர்காணலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

இது பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள www.irctc.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.