வீட்டு உரிமையாளரின் விரலை கடித்து துப்பிய இளைஞர்.. இனி ஒட்டவே முடியாது.!!

வீட்டை காலி செய்த இளைஞர் முன் பணம் கேட்ட போது ரூ.5000 பிடித்துவிட்டு கொடுத்ததால் ஆத்திரத்தில் அவர் வீட்டு உரிமையாளரின் விரலை கடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் வீட்டு வாடகை தொடர்பான வாக்குவாதத்தில் நபர் ஒருவர் வீட்டு உரிமையாளரின் விரலை கடித்த சம்பவம் நடந்துள்ளது. ஹைதராபாத்தில் வசித்து வரும் 26 வயதுடைய நபர் தனது வீட்டை காலி செய்து இருக்கிறார்.
முன்பணம் குறைந்ததால் ஆத்திரம் :
அப்போது முன்பணமாக கொடுக்க வேண்டிய ரூ.30,000 பணத்தைக் கேட்டபோது வீட்டின் உரிமையாளர் ரூ.5,000 பிடித்தம் செய்து ரூ.25,000 மட்டும் கொடுத்ததாக தெரிய வருகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இ.எம்.ஐ டார்ச்சர் விபரீதம்.. பெட்ரோல் ஊற்றி கொளுத்திய விவசாயி.!!
விரலை கடித்த இளைஞர் :
இந்த நிலையில் ஆத்திரமடைந்த 26 வயது இளைஞர் வீட்டு உரிமையாளரின் விரலை கடித்து துப்பி இருக்கிறார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விரலை மீண்டும் பொருத்த முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: மக்களே கவனம்.. மீண்டும் தலைதூக்கும் கொரோனா.. அடுத்தடுத்து இருவர் பலி?.!