மக்களே கவனம்.. மீண்டும் தலைதூக்கும் கொரோனா.. அடுத்தடுத்து இருவர் பலி?.!

கொரோனா பரவல் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதால் இருவர் உயிரிழந்ததாக தகவல் பரவி வருகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சிறுக சிறுக கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கையானது பெருகி வருகிறது.
கொரோனா தொற்றால் உயிரிழப்பு ?
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் கொரோனா தொற்றால் பாதித்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 59 வயதுடைய பெண்மணி மற்றும் சிறுநீரக நோய் காரணமாக பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி ஆகியோர் கொரோனா தொற்றுக்குட்பட்டு சிகிச்சையின் போது உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Video: உறங்கி கொண்டிருந்த சிறுவனுக்கு கருநாக வடிவில் வந்த எமன்.. வாயில் நுரை தள்ளி பரிதாப சாவு.!!
கவனமாக இருக்க எச்சரிக்கை :
எனினும் இவர்கள் கொரோனாவால் மரணம் அடைந்தார்களா? அல்லது இணை நோயால் மரணம் அடைந்தார்களா? என்ற தகவலானது உறுதி செய்யப்படவில்லை. கடந்து சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், மக்கள் கவனமாக இருப்பது நல்லது என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: அடக்கடவுளே.. 9 வயது சிறுமி தலையில் பலாப்பழம் விழுந்து உயிரிழப்பு.. இப்படியும் மரணம்..!!