தீராத சந்தேகத்தால் பயங்கரம்.. மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருப்பதாக இளைஞர் உடல் துண்டுதுண்டாக்கி கொலை.!



in Kerala man Killed youth for Affair Doubts 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் வசித்து வந்தவர் முகமது ஆரிப் (வயது 38). இவர் தற்போது கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டம், கல்பெட்டா, வெல்லமுண்டா கிராமத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவருடன் மனைவியும் தங்கி இருக்கிறார். தம்பதிகள் வாடகை வீட்டில் இருக்கிறார்கள். 

முகமதுவின் மாநிலத்தை சேர்ந்த முஜீப் (வயது 25) என்ற இளைஞரும், இதே பகுதியில் தனியாக தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் ஒரே மாநிலத்தில் இருந்து வந்ததால் நட்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனிடையே, முகமது ஆரிப், முஜீப் தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருக்கலாம் என சந்தேகித்துள்ளார்.

இதையும் படிங்க: ரயில் பயணத்தில் டீ வாங்கி குடிக்கிறீங்களா? கொஞ்சம் இந்த வீடியோவை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க பிளீஸ்.! 

Kerala m

கைப்பையில் துண்டிக்கப்பட்ட உடல்

இதுதொடர்பாக தம்பதிகள் இடையே அவ்வப்போது வாக்குவாதம் எழுந்து வந்துள்ளது. இந்நிலையில், முகமது ஆரிப் நேற்று மாலை நேரத்தில் 2 கைப்பையுடன் வெளியே சென்றுள்ளார். ஆட்டோவில் ஏறியபோது, ஆற்றுப்பாலம் பகுதியில் ஆட்டோவை நிறுத்த சொல்லியுள்ளார். ஆட்டோ நின்றதும் கைப்பையுடன் ஆரிப் பாலத்திற்கு சென்று பையை வீசியுள்ளார். 

இதனால் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பையை திறந்தபோது உடல் பாகங்கள் இருந்தது. இதனையடுத்து, முகமது ஆரிப்பை கைது செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், மனைவியுடன் கள்ளக்காதல் உறவு வைத்திருந்ததாக தான் சந்தேகம் அடைந்ததாகவும், அந்த விஷயத்தில் முஜீப்பை கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். இதனால் முகமது ஆரிப்பிடம்  விசாரணை தொடருகிறது. 

இதையும் படிங்க: ஆன்லைன் லோன் மோசடி; ஆபாசமாக சித்தரித்து ரூ.300 கோடி பணம் பறிப்பு.!