8 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த கொடூரன்; உடலெல்லாம் கடித்து வைத்து சித்தரவதை.!



in-delhi-mubaraknagar-8-aged-minor-girl-kidnapped-and-r

பாலியல் குற்றங்களை குறைக்க கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்றுதான் தீருமோ என ஒவ்வொரு துயரம் நடக்கும்போதும் கேள்விகளை எழுப்பதூண்டுகிறது.

தலைநகர் டெல்லியில் நடக்கும் பாலியல் வன்கொடுமை தொடர்பான விஷயங்கள், இந்திய அளவில் கடும் அதிர்வலையை உண்டாக்குகின்றன. ஏனெனில் இந்தியாவின் தலைநகராக கருதப்படும் நகரில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள் உலகளவில் அறியப்படும் என்பதால் அவை பெரும் கவனத்தை பெறுகிறது. அந்த வகையில், டெல்லியில் தற்போது துயரம் ஒன்று நடந்துள்ளது.

இதையும் படிங்க: தந்தை உயிரிழந்ததால் 10 வயதில் குடும்ப பாரத்தை ஏற்றுக்கொண்ட சிறுவன்; உதவ முன்வந்த ஆனந்த் மகேந்திரா.!

சிறுமி கடத்தல்:

டெல்லியில் உள்ள முபாரக்பூர் பகுதியில்  வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி தனது வீட்டில் வெளியே இருந்துள்ளார். அச்சமயம் சிறுமி மர்ம நபர் ஒருவரால் கடத்தி செல்லப்பட்டுள்ளார். சிறுமியை கடத்தி சென்ற கயவன், அவரை ஒருநாள் முழுவதும் கட்டிவைத்துள்ளார். 

பாலியல் அத்துமீறல்:

பின் சிறுமியை கட்டிவைத்தவாறு அவரின் உடலில் பற்களால் கடித்து சித்தரவதை செய்த கொடூரன், ஒருகட்டத்தில் அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளான். பின் சிறுமியின் வீட்டருகே உள்ள பகுதியில் சிறுமியை கொண்டுவந்து விட்டு கயவன் தப்பி சென்றுள்ளான். பாதிக்கப்பட்ட சிறுமியை காணாது பெற்றோர் முன்னதாகவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். 

காவல்துறை அதிகாரிகள் விசாரணை:

வீட்டிற்கு வந்த சிறுமியின் உடலில் இருந்த காயங்கள் பெற்றோருக்கு பதற்றத்தை ஏற்படுத்த, அவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நடத்திய விசாரணையில் நடந்த துயரம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: ரயில் பயணத்தில் மர்ம உறுப்பை தொட்ட நபரால் 16 வயது சிறுவனுக்கு அதிர்ச்சி.! X-தளத்தில் பதிவு.!