"ஜனநாயகன் ரிலீஸில் பழைய ரசிகராக இருக்க விஜய் அனுமதி.?!" அமைச்சர் விக்னேஷ் பேட்டி.!
நள்ளிரவில் நிர்வாண கோலத்தில் கோவிலுக்குள் புகுந்து... அம்மன் சிலையை தூக்கிட்டு குளத்தில் மூழ்கிய இளம்பெண்! வாடகை அறையில் சிக்கிய திடுக்கிடும் காரணம்... பரபரப்பு டியோ..!!!
ஐதராபாத்தில் மென்பொருள் பெண் பொறியாளர் ஒருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த வழக்கில் புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. உயிரிழப்புக்கு முன்பு கோயிலில் இருந்து எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் அம்மன் சிலை இதுவரை கிடைக்காததால், அதைத் தேடும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். முதற்கட்டத்தில் தற்கொலை என பதிவான வழக்கு தற்போது பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கோயிலில் இருந்து குளம் வரை நடந்தது என்ன?
உயிரிழந்தவர் தேஜஸ்வினி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று அவர் தனது ஆடைகளை கழற்றிவிட்டு அருகிலிருந்த கோயிலுக்குள் சென்றதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அங்கிருந்த அம்மன் சிலையை கையில் எடுத்துக்கொண்டு அருகிலுள்ள குளத்தை நோக்கிச் சென்ற அவர், பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். ஆனால் அவர் எடுத்துச் சென்ற சிலை மட்டும் இதுவரை கிடைக்கவில்லை. அந்தச் சிலை கிடைத்தால் வழக்கின் முக்கிய மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.
குளத்தில் தீவிர தேடுதல், குடும்பத்தினரிடம் விசாரணை
காணாமல் போன சிலையை கண்டுபிடிக்க மீட்புப் படையினர் படகுகள் மற்றும் அதிநவீன தேடுதல் உபகரணங்களுடன் குளத்தில் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதையடுத்து, தேஜஸ்வினியின் தாயார் அருணாவிடமும் போலீஸார் விரிவாக விசாரணை நடத்தினர். மேலும், தேஜஸ்வினி எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் கடிதம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவரது வங்கிப் பரிவர்த்தனைகள், மொபைல் அழைப்புகள் மற்றும் சம்பவத்திற்கு முந்தைய நாட்களில் நடந்த செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
வாடகை அறை விவரமும் சந்தேகத்தை அதிகரித்தது
விசாரணையில், தேஜஸ்வினி தங்கியிருந்த வாடகை அறை தொடர்பான தகவல்களும் கவனம் பெற்றுள்ளன. அந்த அறைக்கு தினசரி சுமார் ரூ.3,500 வாடகை செலுத்தப்பட்டதாகவும், மாத வாடகை கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாயை எட்டியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த இடம் தொடர்பாகவும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், அவர் தங்கியிருந்த கட்டிடத்தின் மேல்தளங்கள் தங்கும் விடுதியாக செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. அங்கு தங்கியிருந்தவர்களுக்கு இந்த போலீஸ் விசாரணை வழக்குடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை அறிய சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
🚨 Running Naked in the Streets at Midnight, Then Jumping Into a Lake
🚨 Tragic Suicide of a Young Woman Causes Stir in Medipally, Telangana.
“Here is the full story, unfolded” ✍🏻
***Disturbing Visuals***
A software job at a young age, earning a salary in the lakhs—her happy… pic.twitter.com/1xh7FjBXpf
— Vamshi (@vamshi020693) July 19, 2026
இதையும் படிங்க: ரூ.4 லட்சத்திற்கு டீல் பேசி கணவனின் கால்களை உடைக்க வைத்த மனைவி! பகீர் பின்னணியால் வெளியான பரபரப்பு வீடியோ..!!!