கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு.. 2 குழந்தைகளுக்கு ஏற்பட்ட கொடுமை.!

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு.. 2 குழந்தைகளுக்கு ஏற்பட்ட கொடுமை.!



Husband killed 2 babys for wife fight

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளையும் சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மலகாலா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி லட்சுமி. எந்த தம்பதியினருக்கு ஆதித்யா என்ற மகனும், அமுல்யா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் கணவன் மனைவியான ஸ்ரீகாந்த் லட்சுமி தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

karnataka

அதேபோல் இன்று அதிகாலை கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஸ்ரீகாந்த் தனது இரண்டு குழந்தைகளையும் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். இந்த தாக்குதலில் உடல் நசுங்கி இரு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

அதன் பின்னர் ஸ்ரீகாந்த் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார். மேலும் படுகாயம் அடைந்த லட்சுமி மைசூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

karnataka

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீரங்கப்பட்டணா ரூரல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள ஸ்ரீகாந்த் தீவிரமாக தேடி வருகின்றனர்.