கார் ஓட்டுனரை ஈவு இரக்கமின்றி கொலை செய்த குற்றவாளிகள் கைது: நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்.!

கார் ஓட்டுனரை ஈவு இரக்கமின்றி கொலை செய்த குற்றவாளிகள் கைது: நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்.!



Haryana Farizabad Driver Drag on Car Killed Case 2 Arrested 

 

ஹரியானா மாநிலம் பரிதாபத் பகுதியில், கடந்த 10ம் தேதி காரை கடத்திய மர்ம நபர்கள், அதனை தடுக்க முயன்ற ஓட்டுனரை காருடன் இழுத்து சென்றனர். 

காரின் பக்கவாட்டு பகுதியில் சிக்கிக்கொண்டு தொங்கியவாறு பயணம் செய்த ஓட்டுநர், ஒருகட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அதனை கண்டுகொள்ளாத கும்பல், சாலையில் அவரை இழுத்து சென்று கொன்றது. 

இந்த விஷயம் தொடர்பாக அதிர்ச்சியுறும் வீடியோ வெளியாகி வைரலானது. களத்தில் இறங்கிய காவல் துறையினர், இக்குற்றத்தில் ஈடுபட்ட 2 கொள்ளையர்களை கைது செய்தனர். 

விசாரணையில், கொள்ளை செயலில் ஈடுபட்டு, விமான நிலையத்தில் இருந்து காரி பயணித்து, பின் ஓட்டுனரை தாக்கி வாகனத்தை திருடி தப்பிக்க முயன்றது அம்பலமானது.

உயிரிழந்த ஓட்டுநர் பிஜேந்தர் ஷா என்பது தெரியவந்தது. கொள்ளையர்கள் முகம்மது ஆசிப், முகமது மோராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.