மனைவியுடன் 3 பெண்கள்.. ஆபாச படமெடுத்த கணவன் & குடும்பத்தார்.. ஒரேநாளில் 10 முறை உடலுறவு கொடுமை..!



Gujarat Rajkot Husband & Family Torture Daughter in Law Act Porn Movie

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், ராஜ்கோட் பகுதியில் வசித்து வரும் பெண்மணி, அங்குள்ள காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை வழங்கியுள்ளார். அந்த புகாரில் பல அதிர்ச்சியுறும் தகவல்கள் தெரியவந்துள்ளன. 

பெண்மணி வழங்கிய புகாரின்படி, "கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் கொண்ட தம்பதிகள், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு மகிழ்ச்சியாக திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். தம்பதிகளின் காதல் காரணமாக இரட்டை குழந்தைகளும் பிரிந்துள்ளனர்.

இந்நிலையில், பெண்ணின் கணவர் மற்றும் கணவரின் தாய்-தந்தை ஆகியோர் சேர்ந்து தங்களின் மருமகளை ஆபாச படத்தில் நடிக்க வற்புறுத்தி இருக்கின்றனர். அதாவது, ஆபாசமாக வீடியோ எடுத்து அதனை பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். 

gujarat

இதற்காக வீட்டில் கேமிரா, பாலியல் பொம்மைகள் உட்பட பல விஷயங்களை வாங்கி வைத்துள்ளவர்கள், ஒரே இரவில் பெண்ணுடன் 10க்கும் மேற்பட்ட முறைகள் உடலுறவு கொள்ள வற்புறுத்தி இருக்கின்றனர். நேரலை செக்ஸ் விடியோவும் பதிவேற்றி இருக்கின்றனர். 

ஒரேநாள் இரவில் நடந்த கொடுமையால் பதறிப்போன பெண்மணி, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது உண்மை அம்பலமானது. 3 பெண்களை அழைத்து வந்து மூவரும் சேர்ந்து உடலுறவு கொள்வது போலவும் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. 

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இந்த தகவல்கள் அம்பலமாகின. வீடியோ பதிவிட்டதற்காக பிட்காயின் வழி பணம் பெற 700 டோக்கனும் பெறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பெண்ணின் கணவர், அவரின் தாய்-தந்தை ஆகியோரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.