தள்ளாத வயதில் உதவியாளர் மனைவியுடன் தகாத உறவு.., காமவெறி கொண்ட நகை வியாபாரி கைது..!

தள்ளாத வயதில் உதவியாளர் மனைவியுடன் தகாத உறவு.., காமவெறி கொண்ட நகை வியாபாரி கைது..!



gold-busines-man-did-something-with-the-assistant-s-wif-GEXZ5G

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்திலுள்ள ரேணிகுண்டாவிலுள்ள நகை வியாபாரி தனது உதவியாளரின் மனைவியை  உல்லாசத்துக்கு அழைத்து பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகைக்கடை வியாபாரி ஒருவர் தன்னிடம் வேலை செய்யும் உதவியாளரின் மனைவியை உடல் உறவுக்கு அழைத்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பல பெரிய மனிதர்கள் இழிவான செயல்களில் ஈடுபடுவது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ரேணிகுன்டாவை சேர்ந்தவர் நேம் சந்த் இவர் தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார். அவரிடம் உதவியாளராக இருப்பவரின் மனைவியின் மீது இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணை எப்படியாவது அடைய வேண்டும் என்று துடித்தார்.

இந்நிலையில் ஒருநாள் அவரது உதவியாளருக்கு போன் செய்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் எனவே உங்கள் மனைவியை அனுப்பி வையுங்கள் எனக்கேட்டார். அவரது உதவியாளரும் முதலாளி அழைக்கிறாரே என்பதற்காக தனது மனைவியை தனது முதலாளி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். 

ஆனால் அவரது மனைவி முதலாளி வீட்டுக்கு செல்ல தயங்கினார். உங்கள் முதலாளி வீட்டில் தனியாக இருக்கும் போது நான் எப்படி எங்கு செல்வது என தனது கணவரிடம் கேட்டார். அவர் நமக்கு தந்தை போன்றவர் அதனால் தயங்காமல் சென்று வா என்று அனுப்பி வைத்தார். 

இதனால் அந்த பெண்ணும் முதலாளி வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் முதலாளி நேம் சந்த் அந்த பெண்ணின் கையை பிடித்து படுக்கையில் அமர வைத்ததுடன் நீ எஎன்னுடன் சிறிது நேரம் இருக்க வேண்டும் என்றும், உனக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறேன் இந்த வீட்டில் இருக்கின்ற எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள் என்று கூறியுள்ளார். மேலும் உனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னுடன் தனியாக செலவிடவேண்டும் என்றும் உன்னையும் உனது குடும்பத்தை நான் பார்த்து கொள்கின்றேன் என அந்த பெண்ணை படுக்கையில் தள்ளி பலாத்காரம் செய்ய முயற்சித்து உள்ளதாக தெரிகிறது. ஆனால் அந்த பெண் அங்கிருந்து தப்பித்து ஓடிவந்திருக்கிறார். பிறகு இதை யாரிடமும் கூற வேண்டாம் என அந்த நகை கடை உரிமையாளர் கெஞ்சியுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ரேணிகுண்டாவில் உள்ள மார்வாடி சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். மார்வாடி சமுதாய தலைவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து சென்று திருப்பதி எஸ்பியிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நேம் சந்த்தை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.