என் வாழ்க்கை அழுக்கானது.! திருமணம் நெருங்கிய நிலையில் தூக்கில் தொங்கிய இளம்பெண்! வெளியான பகீர் காரணம்!

என் வாழ்க்கை அழுக்கானது.! திருமணம் நெருங்கிய நிலையில் தூக்கில் தொங்கிய இளம்பெண்! வெளியான பகீர் காரணம்!


girl-commit-suicide-while-arranging-marriage

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வந்தவர் பவன். இவருக்கு ப்ரீத்தி என்ற பெண்ணுடன் திருமணம் செய்ய கடந்த சில தினங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. மேலும் இருவருக்கும் இரு வாரங்களுக்கு பிறகு திருமணம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையில் நேற்று முழுவதும் ப்ரீத்தி எனக்கு திருமணமே நடக்காது என கூறி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து தனது அறைக்கு சென்ற அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில் அக்காவை பார்ப்பதற்காக அறைக்கு சென்ற ப்ரீத்தியின் தங்கை பயல் அவர் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் கதறி துடித்துள்ளார். 

suicide

அதனைத் தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ப்ரீத்தியின்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அப்பொழுது அங்கிருந்த கடிதத்தையும் கைப்பற்றினர்.அதில் என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை. என் வாழ்க்கை அழுக்கானது. நான்தான் காரணம் என எழுதியுள்ளார். 

மேலும் இது குறித்து மாப்பிள்ளை பவனிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர், நாங்கள் மேட்ரிமோனியல் மூலமாக அறிமுகமாகி, காதலிக்க தொடங்கினோம். இந்நிலையில் எங்கள் இருவரின் குடும்பத்தினரும்  திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். அப்பொழுதுதான் ப்ரீத்தியின் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் சில பூஜைகள், பரிகாரங்களை முடித்துவிட்டு திருமணத்தை நடத்தலாம் என நாங்கள் கூறினோம். ஆனால் அதனை ப்ரீத்தி ஏற்றுக்கொள்ளவில்லை. கோபமாக சென்றுவிட்டார். பின்னரே இத்தகைய முடிவை எடுத்துள்ளார் என கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.