வீட்டில் நுழைந்து பாலியல் வன்கொடுமை முயற்சி! எதிர்த்துப் போராடிய இளம்பெண்ணிற்கு துடிதுடிக்க நேர்ந்த கொடூரம்!

வீட்டில் நுழைந்து பாலியல் வன்கொடுமை முயற்சி! எதிர்த்துப் போராடிய இளம்பெண்ணிற்கு துடிதுடிக்க நேர்ந்த கொடூரம்!



girl-burned-by-terrible-persion-while-abusing

பீகாரில் நசீர்பூர் என்ற பகுதியில் கடந்த 7ம் தேதி இரவு 22 வயது நிறைந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜாராய் என்பவர் முகேஷ் குமார் என்பவருடன் வீட்டில் நுழைந்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். 

ஆனாலும் அப்பெண் அவரை எதிர்த்து போராடிய நிலையில், அவனால் அப்பெண்ணை எதுவும் செய்ய முடியவில்லை இதனால் ஆத்திரமடைந்த ராஜாராய் முகேஷ் உதவியுடன் மண்ணெண்ணையை எடுத்து அந்த இளம்பெண்ணின் மீது ஊற்றி உயிரோடு தீவைத்து எரித்துள்ளார். இந்நிலையில் உடல் முழுவதும் தீ காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

sexual abuse

 ஆனாலும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகவே இருந்துள்ளது. மேலும் உடலில் 90 சதவீதம் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். ராஜா ராய் மற்றும் முகேஷ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்நிலையில் தனது மகளை பறிகொடுத்த பெற்றோர்கள் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என கதறி துடித்தனர். இச்சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.