நண்பன் நீரில் மூழ்கி உயிரிழப்பதை செல்போனில் வீடியோ எடுத்த சக நண்பர்கள்! அதிர்ச்சி வீடியோ!

கார்நாடக மாநிலம், கல்புர்கி என்ற மாவட்டத்தில், கல்குவாரியில் தேங்கியுள்ள நீரில் குளிக்க சென்ற 3நண்பர்களில் ஒருவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் மூன்று நண்பர்கள் இணைந்து கல்குவாரியில் தேங்கியுள்ள நீரில் குளிக்கச் சென்றுள்ளனர். மூன்று நண்பர்களில் இருவர் கரையில் இருந்தபடி தண்ணீரில் விளையாட ஒருவர் மட்டும் கரையில் நின்றபடி அங்கு நடந்ததை வீடியோ எடுத்து கொண்டிருந்துள்ளார்.
மூன்று பேரில் ஒருவர் தண்ணீரில் குதித்து சிறிது தூரம் செல்கிறார். பின்னர் கரைக்கு மிகவும் அருகில் வந்து நீந்த முயற்சிக்கிறார். ஆனால் நீண்ட நேரம் அவரால் நீச்சல் அடிக்க முடியாமல் தத்தளித்து நீரில் மூழ்கியுள்ளார். நீரில் மூழ்கும் நண்பன் கைக்கு எட்டும் தூரத்தில், இருக்க மற்றொருவர் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார். மற்றொரு நண்பர் வீடிாயோஎடுத்துள்ளார்.
இறுதியில் தண்ணீரில் மூழ்கியவர் நீண்ட நேரம் வெளியில் வராமல் இருந்ததால் தான் நண்பர்கள் இருவருக்கும் அவர் இறந்துவிட்டது தெரிய வந்தது. இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.