திடீர் வெள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள் - திடுக்கிடும் வீடியோ காட்சி..!!

திடீர் வெள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள் - திடுக்கிடும் வீடியோ காட்சி..!!



Flood in kerala rubber factory

கேரள மாநிலத்தில் கனமழையில், வெள்ளப்பெருக்கில் சிக்கிய ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள். முண்டக்காயம் சென்னாப்பாறை ரப்பர் தோட்டத்தில் உள்ள ஓடையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரை கடக்க முடியாமல் ரப்பர் தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்தவர்கள் இரு கரைக்கும் இடையே கயிறு ஒன்றை கட்டி தொழிலாளர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். 

கடந்த சில நாட்களாக கேரளாவில் 17 மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், சில மாவட்டங்களுக்கு ஆரஞ் அலர்ட்டும் அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இன்று கேரளாவில் ஐந்து மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்றும் கேரளாவில் 15 மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.