திடீரென திருநங்கையாக மாறிய இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்! என்ன நடந்தது தெரியுமா?
திடீரென திருநங்கையாக மாறிய இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்! என்ன நடந்தது தெரியுமா?
நெற்றியில் பொட்டு வைத்து சுடிதார் அணிந்து வலைத்தளங்களில் வலம்வருகிறார் முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக வலம்வந்த காம்பீர் தற்போது இந்திய அணியில் இடம்பெறவில்லை. வுதம் கம்பீர், அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சமூகம் சார்ந்த பல விஷயங்கள் குறித்தும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் திடீரென்று கவுதம் காம்பீர் போட்ட வேடம் ஓன்று வைரலாகிவருகிறது. அது என்னவென்றால் தமிழகத்தில் கூவத்தூரில் திருநங்கைகளுக்கென்று ஒரு நாள் திருவிழா நடைபெறும் அதுபோன்று திருவிழா ஓன்று வட மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு கிரிக்கெட் வீரர் காம்பீர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த விழாவை திருநங்கைகள், திருநம்பிகள் ஒன்றாக சேர்ந்து கொண்டாவடுவது வழக்கம். வட இந்தியாவில் பிரபலமாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் என்ன விசேஷம் என்றால், சுடிதார், துப்பட்டா அணிந்தும், நெற்றியில் பெரிய குங்குமம் வைத்துக் கொண்டும் திருநங்கையைப் போன்று விழாவில் கலந்து கொண்டு, திருநங்கைகள் - திருநம்பிகள் வாழ்க்கை குறித்து பேசியுள்ளார் காம்பீர்.
சுடிதார், துப்பட்டா, நெற்றில் பொட்டு என திருநங்கை போலவே இருக்கும் கம்பீரின் போட்டோக்கள் இனைய தலத்தில் வைரலாகிவருகிறது. இதை பார்த்த அனைவரும் கவுதம் கம்பீரை பாராட்டி வருகின்றனர்.