இரயில் முன் பாய்ந்து 30 வயது இளைஞர் தற்கொலை; பொதுமக்கள் முன் பதறவைக்கும் செயல்.!

இரயில் முன் பாய்ந்து 30 வயது இளைஞர் தற்கொலை; பொதுமக்கள் முன் பதறவைக்கும் செயல்.!



Delhi INA Metro Man Suicide Jump in front of Train 

 

டெல்லியில் உள்ள ஐஎன்ஏ மெட்ரோ இரயில் நிலையத்தில், நேற்று இரவு 07:38 மணியளவில் வருகை தந்த நபர், இரண்டாவது நடைமேடைக்கு சென்றார். 

அப்போது, அவ்வழித்தடத்தில் இரயில் ஒன்று வந்த நிலையில், இளைஞர் சற்றும் எதிர்பாராத விதமாக இரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தலைவைத்து தற்கொலை செய்துகொண்டார். 

இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

விசாரணையில், இளைஞர் அங்குள்ள சத்யா நிகேதன் பகுதியை சேர்ந்த அஜிடேஜ் (வயது 30) என்பது தெரியவந்தது. அவரின் தற்கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.