பெற்றோர்களே கவனம்.! உயிரே போய்விடும்!! வெளியான நெஞ்சை உருக்கும் பகீர் சம்பவம்!!

பெற்றோர்களே கவனம்.! உயிரே போய்விடும்!! வெளியான நெஞ்சை உருக்கும் பகீர் சம்பவம்!!



children-dead-inside-car

புல்தானா மாவட்டம் கவாலிபுரா பகுதியில் வசித்து வந்த 5 வயது ஆதில் சேக் ஜமீல், 3 வயது ஆசிம் சேக் மற்றும் 5 வயது சிறுமி ஆகியோர் ஆகியோர் சமீபத்தில் வீட்டின் அருகே பார்க்கிங்கில் விளையாடி கொண்டு இருந்துள்ளனர். அப்பொழுது விளையாட்டுத்தனமாக அனைவரும் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றி ஏறியுள்ளனர். 

ஆனால் அதன்பின் அவர்களால் கார் கதவை திறந்து வெளியே வர முடியவில்லை. இதனால் 3 பேரும் காருக்குள்ளேயே சிக்கிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அனைவரும் மயக்கமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இரவு வரை குழந்தைகளை காணாததால் பதறிப்போன  பெற்றோர்கள் குழந்தைகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர் . அதனை தொடர்ந்து போலீசார் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மறுநாள் பேச்சு மூச்சின்றி காருக்குள் கிடந்த 3 பேரையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காருக்குள் இருந்த குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் சிறுவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.  மேலும் 5 வயது சிறுமிக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.