மணமேடையில் சரிந்து விழுந்த மணப்பெண்! மணமகனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

மணமேடையில் சரிந்து விழுந்த மணப்பெண்! மணமகனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!



Brides died in marriage

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கும் வினிதா என்ற பெண்ணிற்கும் இருவீட்டாரும் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்துள்ளனர். இந்தநிலையில் அவர்கள் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனையடுத்து மணமகன் மற்றும் மணப்பெண் மேடையில் அமர்ந்து இருந்த நிலையில் திடீரென மணப்பெண் வினிதா மயங்கி விழுந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகன் மற்றும் உறவினர்கள் உடனடியாக வினிதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இரவு முழுவதும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

marriage

இதனையடுத்து அதிகாலை 3 மணிக்கு வினிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது கண் எதிரிலேயே வினிதா உயிரிழந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த சஞ்சய் மற்றும் மணப்பெண்ணின் குடும்பத்தார்கள் கதறி அழுதுள்ளனர். இதனையடுத்து வினிதாவின் பிரேத பரிசோதனையில் அவர் நுரையீரல் பிரச்சனையால் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.