கடன் பிரச்சனையில் பெண் கை, காது, மார்பு அறுத்து பயங்கர கொலை.. சந்தையில் மக்கள் மத்தியில் நடந்த பயங்கரம்.!



Bihar Woman Killed in Market

 

மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தையில் பெண்ணை பயங்கரமாக கொலை செய்த கும்பலின் அதிர்ச்சி செயல் பதறவைத்துள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் பிர்பைண்டி பகுதியை சேர்ந்தவர் அசோக் யாதவ். அவரின் மனைவி நீலம் தேவி (வயது 40). தம்பதிகள் மளிகை கடையை நடத்தி வருகிறார்கள். இதே ஊரைச்சேர்ந்த ஷகீல் அகமது என்பவரிடம் தம்பதிகள் கடன் வாங்கி இருக்கின்றனர். கடந்த மாதம் பணத்தை திரும்ப செலுத்துவது தொடர்பாக இருதரப்பு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நீலம் தனது மகனோடு சந்தையில் சம்பவத்தன்று பொருட்கள் வாங்க சென்று இருக்கிறார். அப்போது, அங்கு வந்த ஷகீல், தனது சகோதரர் முகமது ஜதீனுடன் சேர்ந்து பிரச்சனை செய்துள்ளார். அங்கு நடந்த வாக்குவாதத்தில் நீலம் தேவியை ஷகீல் மற்றும் முகமது சேர்ந்து பயங்கரமான ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். 

Bihar

அதுமட்டுமல்லாது, கை-காது, மார்பகத்தை வெட்டி இருக்கின்றனர். பெண்ணின் கால்களையும் வெட்ட முயற்சித்துள்ளனர். இதற்கிடையே மக்கள் சம்பவ இடத்தில் கூடியதால் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட நீலம் தேவி பரிதாபமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் மத்தியில் கூட்டம் நிறைந்த இடத்தில் நடந்த பயங்கர கொலை சம்பவமானது உள்ளூர் மக்களை அதிரவைத்துள்ளது.