42 வயதில் இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்த தமிழ் சீரியல் நடிகை; குவியும் வாழ்த்துக்கள்.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் நடிகை.! அவருக்கு என்னாச்சு?? புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!
![rakki-savanth-admitted-in-hospital-viral-photo](https://cdn.tamilspark.com/large/large_img20240516210837-72899.jpg)
1997ம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் வெளிவந்த அக்னிசக்ரா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ராக்கி சாவந்த். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள அவர் தமிழ் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் கவர்ச்சி ஆட்டமும் போட்டுள்ளார். பரபரப்புக்கு பஞ்சமில்லாத அவர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 15 நிகழ்ச்சியில் கணவர் ரித்தேஷை அறிமுகப்படுத்தினார். ஆனால் சில காலங்களில் இருவரும் பிரிந்தனர்.
ராக்கி சாவந்த் மருத்துவமனையில் அனுமதி
தொடர்ந்து அவர் ஆதில்கான் துரானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஆதிலுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் போலீசில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில் ராக்கி சாவந்த் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் இருந்து வேதனையுடன் மதுரை முத்து மனைவி வீடியோ.! ஏன்? என்னதான் ஆச்சு??
வைரலாகும் புகைப்படம்
இது தொடர்பான செய்திகள் பெருமளவில் வைரலானது. இந்த நிலையில் ராக்கி சாவந்த் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்களை பிரார்த்தனை செய்யுமாறும் அவரது முன்னாள் கணவர் ரித்தேஷ் சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதையும் படிங்க: "என் மூஞ்சி நல்லா இல்லன்னு கண்ணாடி கூட பாக்க மாட்டேன்" இயக்குனர் செல்வராகவனின் மனம் வருந்திய பேட்டி..