# BREAKING: கல்குவாரியில் பெரிய பாறை சரிந்து விழுந்து 8 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி...! பணியின்போது நேர்ந்த சோகம்..!!!



bengaluru-madanapattana-quarry-rock-collapse-eight-work

கர்நாடக மாநிலம் தெற்கு பெங்களூருவின் மதனபட்டணத்தில் உள்ள 'காவேரி' கல்குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவு விபத்தில் பீகாரைச் சேர்ந்த 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். திடீரென நிகழ்ந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணியின்போது நேர்ந்த சோகம்

விபத்து நடந்தபோது கல்குவாரியில் சுமார் 15 முதல் 20 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பிரம்மாண்ட பாறைகளை அகற்றும் பணிக்காக ஹிட்டாச்சி இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதையும் படிங்க: வீட்டுக்குள் எமனாக மாறிய மோட்டார் சைக்கிள்! தூக்கத்திலேயே பரிதாபமாக பறிபோன 4 உயிர்கள்! அதிர்ச்சி சம்பவம்!!!

பாறை சரிந்து 8 பேர் பலி

தகவலின்படி, இயந்திரத்தை இயக்கியவர் அருகில் தொழிலாளர்கள் இருந்ததை கவனிக்காமல் பாறையை நகர்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் பெரிய பாறை ஒன்று எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்து, அதன் அடியில் சிக்கிய 8 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் இருப்பதாகவும், மீட்புப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விசாரணை தீவிரம்

விபத்து குறித்து கர்நாடகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு நடைமுறைகளில் ஏதேனும் அலட்சியம் ஏற்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதையும் படிங்க: மன்னார்குடி அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பிய 4 மாணவர்கள் மீது கார் மோதி உயிரிழப்பு! கதறிதுடிக்கும் பெற்றோர்கள்...!!!!