நாடே அதிர்ச்சி.. வாய் பேச இயலாத தாய், மகள் 8 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!

நாடே அதிர்ச்சி.. வாய் பேச இயலாத தாய், மகள் 8 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!



Assam Guwahati Mother and Daughter Raped 

 

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி, ஸத்கான் பகுதியில் வாய் பேச இயலாத தாய், தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவர்கள் இருவரையும் 8 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. 

வீட்டில் மயக்க நிலையில் தாய்-மகள் அலங்கோலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

Assam

முதற்கட்ட விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து, 4 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியோரின் விபரம் சேகரிக்கப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.