ஓடிடியில் வெளியாகும் சூரியின் மாமன்.! எப்போது? வெளிவந்த தகவல்!!
#Breaking: வகுப்பறையில் யூடியூப் பார்த்து பிரசவம்.. இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த கல்லூரி மாணவி.. பதறவைக்கும் சம்பவம்.!

மாணவி ஓட்டுனருடன் காதல் வயப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், கருக்கலைப்பு செய்ய முயற்சித்தவர் சடலமாக மீட்கப்பட்டார்.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூரில் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 19 வயது மாணவி ஒருவர் வகுப்பறையில் தனியே இருந்துள்ளார்.
பின்னர் அங்கு வந்த மாணவிகள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில், மாணவி இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரின் அருகே ஆறு மாதமாகும் பச்சிளம் குழந்தை இருந்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையின்படி, பெண்ணுக்கு கார் ஓட்டுனரோடு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மாணவி தனது நட்பால் கருவுற்றதாக அறியப்படும் நிலையில், அவர் கருவை கலைக்க முடிவெடுத்து யூடியூப் பார்த்து கருக்கலைப்பில் ஈடுபட்டு மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.