"ஜனநாயகன் ரிலீஸில் பழைய ரசிகராக இருக்க விஜய் அனுமதி.?!" அமைச்சர் விக்னேஷ் பேட்டி.!
8 வருஷ காதல்... காதலன் பெண்ணுக்கு செய்த துரோகம்! சிக்கிய உருக்கமான கடிதம்... கடைசி விருப்பத்தை பார்த்து அதிர்ந்துப்போன பெற்றோர்!!!
மும்பையில் பணியாற்றி வந்த ஆந்திராவைச் சேர்ந்த 26 வயது மென்பொருள் பொறியாளர் கீர்த்தி, நீண்டகால காதல் உறவில் ஏற்பட்ட விரக்தியால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலரின் திருமண ஏற்பாடுகள் குறித்து தெரிந்த பின்னர் அவர் இந்த முடிவை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எட்டு ஆண்டுகள் நீண்ட காதல்
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த கீர்த்தி, பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த சாய் சுமந்தை கடந்த எட்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் நீண்ட காலமாக உறவில் இருந்த நிலையில், சாய் சுமந்துக்கு அவரது குடும்பத்தினர் வேறொரு பெண்ணுடன் திருமணத்தை நிச்சயித்ததாக தெரிகிறது.
இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான கீர்த்தி, கடந்த ஜூலை 14-ம் தேதி மும்பையில் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.
உருக்கமான கடைசி விருப்பம்
குடும்பத்தினருக்கு எழுதியிருந்த கடிதத்தில், தனது இறுதிச்சடங்கை காதலரின் சொந்த ஊரிலேயே நடத்த வேண்டும் என்றும், தனது உடலில் தாலி கட்டிய பிறகே இறுதிச் சடங்குகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கீர்த்தி தனது கடைசி விருப்பத்தை பதிவு செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணை நடைபெற்று வருகிறது
கீர்த்தியின் உயிரிழப்பு தொடர்பாக போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீண்டகால காதல் உறவின் முடிவு சோகமாக மாறிய இந்த நிகழ்வு, இரு குடும்பத்தினரையும் மட்டுமல்லாமல் அவரை அறிந்தவர்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.