சிறையில் அடைக்கப்பட்ட தாயை நேரில் பார்க்க மகள் நடத்திய பாசப்போராட்டம்: கண்ணீரை வரவழைக்கும் நிகழ்வு.!

சிறையில் அடைக்கப்பட்ட தாயை நேரில் பார்க்க மகள் நடத்திய பாசப்போராட்டம்: கண்ணீரை வரவழைக்கும் நிகழ்வு.!



Andhra Pradesh Child want to meet Mother in Curnool Prison 

 

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த 35 வயது பெண்மணி காதியாபி. இவர் சமீபத்தில் சிறிய அளவிலான திருட்டு குற்றத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் கணவரை இழந்து தனியொரு பெண்மணியாக தனது ஐந்து குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில், அவரின் மீது திருட்டு வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்கு பின் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பெண்மணியின் 9 வயதுடைய மூத்த மகள் தனது தாயை பார்க்க வேண்டி, கர்னூல் கிளை ஜெயிலின் வாசலில் நின்று கதவைத் தட்டி அம்மாவை அழைத்து கண்ணீர் விட்டுள்ளார். இதனை அடுத்து அதிகாரிகள் முறைப்படி சிறுமி தாயை சந்திக்க அனுமதி வழங்கினர்.