பெற்றோர்களே உஷார்... அன்பாக பேசி எட்டாம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த காமகொடூரன்கள்...

பெற்றோர்களே உஷார்... அன்பாக பேசி எட்டாம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த காமகொடூரன்கள்...



8th girl raped by 5 members in bekar

பீகார் மாநிலம் பாட்னா பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடந்த இரண்டாம் தேதி மாலை 6.30 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த டெம்போ ஓட்டுனர் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சிறுமியை அழைத்து அன்பாக பேசி கடத்தி சென்றுள்ளனர்.

அதனையடுத்து சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்கு அழைத்து சென்று 5 பேரும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து சிறுமி அவர்களிடமிருந்து தப்பித்து வீட்டிற்கு வந்த நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறியுள்ளார்.

Bekar

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனே போலீசில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து முதலில் டெம்போ ஓட்டுனரை கைது செய்துள்ளனர். தலைமறைவான மற்ற நான்கு பேரையும் உடனே கைது செய்ய கோரி சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையத்தை தொடர்ந்து முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.