என்னை விட்டுடுங்க ப்ளீஸ்... கதறிய 4 ஆம் வகுப்பு மாணவி... பள்ளி கழிப்பறையில் வைத்து மாணவியை சீரழித்த காமக்கொடூரன்..!

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்... கதறிய 4 ஆம் வகுப்பு மாணவி... பள்ளி கழிப்பறையில் வைத்து மாணவியை சீரழித்த காமக்கொடூரன்..!


4th-class-girl-rape-in-school-toilet-accused-arrested

மத்திய பிரதேச மாநிலம் போபால் அடுத்த கோஹெஃபிசாவில் உள்ள அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார் மாணவி. இந்நிலையில் மாணவி பள்ளியில் உள்ள கழிப்பறைக்கு சென்றுள்ளார்.

அப்போது கழிப்பறையில் மர்ம நபர் ஒருவர் மறைந்திருந்துள்ளார். மாணவி உள்ளே நுழைந்ததும் உள்ளே இருந்த மர்ம நபர் மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

Mathiya pradesh

பின்னர் வெளியே வந்த மாணவி வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே வகுப்பறையினுள் நுழைந்துள்ளார். இதனைப் பார்த்த ஆசிரியர் மாணவியிடம் ஏன் அழுகிறாய் என்று கேட்டுள்ளார். அதனை அடுத்து மாணவி நடந்த அனைத்தையும் ஆசிரியரிடம் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். விசாரணையில் கைதான நபர் பள்ளியில் பணியாற்றும் பெண் துப்புரவு தொழிலாளியின் கணவர் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.