10 வயது சிறுமியை 4 மாதம் கற்பழித்து கற்பமாக்கிய 12 வயது சிறுவன்

10 வயது சிறுமியை 4 மாதம் கற்பழித்து கற்பமாக்கிய 12 வயது சிறுவன்



12 year old boy made 10 year girl pregnant

மகாராஷ்டிரா பல்கர் மாவட்டத்தில் 12 வயது சிறுவன் 10 வயது சிறுமியை தொடர்ந்து நான்கு மாதங்களாக கற்பழித்ததில் அந்த சிறுமி தற்போது கர்ப்பமடைந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த 12 வயது சிறுவனும், 10 வயது சிறுமியும் ஒரே பகுதியில் அருகருகே இருக்கும் வீட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சிறு வயதிலிருந்தே ஒன்றாக பழகியுள்ளனர். சிறுவர்கள் தானே என பெற்றோரும் இவர்களை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி தனது பெற்றோரிடம் வயிற்றுப் பகுதியில் வலி உள்ளதாக உள்ளார். அதனைத் தொடர்ந்து மருத்துவர்களிடம் சிறுமியை பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி செய்தியை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை கேட்டு கண் கலங்கிய பெற்றோர் இதற்கு யார் காரணம் என சிறுமியிடம் கேட்டுள்ளனர். அப்பொழுதுதான் சிறுமி, பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுவனால் கடந்த நான்கு மாதங்களாக தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த சிறுவன் மீது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் அந்த 12 வயது சிறுவனை போஸ்கோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.