உஷார்.. பெண்களுக்கு முன்கூட்டியே தெரியும் மாரடைப்பின் அறிகுறிகள்.. தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன?..! உயிரே போகும் அபாயம்..!!

பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து காணலாம்.
சமீபகாலமாகவே மாரடைப்பு என்பது 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் வயதானவர்களுக்கு தான் வரும் என்று கூறப்படும் நிலையில், இளம் வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. பெண்களை விட ஆண்களுக்கு தான் மாரடைப்பு அதிகம் வரும் என்று கூறினாலும், 50% பெண்கள் தங்களுக்கு மாரடைப்பு வருதே தெரியாமல் இருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.
பல நேரங்களிலும் பெண்கள் தங்களுக்கு வரும் மாரடைப்பினை நெஞ்செரிச்சல் அல்லது மனப்பதற்றம் என்றே நினைக்கின்றனர். ஆனால் 40% பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான ஒரு குறிப்பிட்ட அறிகுறி கட்டாயம் தென்படும் என்கிறது ஆய்வு.
சர்குலேஷன் ஜர்னலில் வெளியான அறிக்கையில், அஜீரண கோளாறு மற்றும் மாரடைப்பு பிரச்சினைக்கான காரணம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. பலவிதமான காரணங்களால் ஒருவருக்கு அஜீரணக்கோளாறு ஏற்படுமேயானால், அது எப்போதும் ஒரே மாதிரியாக நினைத்துவிடக்கூடாது. ஜீரண பிரச்சனைக்கான சில அறிகுறிகள் தென்பட்டால் அதனை கவனிக்க வேண்டும்.
குறிப்பாக வாயுத்தொல்லை, ஏப்பம், வயிறு உப்பியது போன்றோ அல்லது நிறைவாகவோ இருத்தல், உடல் நலமின்மை, வாயில் கசப்புணர்வு, நெஞ்சரிசல் போன்றவை ஆகும். பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகளை தற்போது காணலாம்.
மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக அஜீரணம், பதற்றம், மூச்சுத்திணறல், அசாதாரண சோர்வு, தூக்கத்தில் தொந்தரவு போன்றவை இருக்கும். மாரடைப்பின் போது குளிர்ந்த வியர்வை, மயக்கம், மூச்சுதிணறல், பலவீனம், அசாதாரணமான சோர்வு இருக்கும். இதனை எப்பொழுதும் போல எண்ணிவிடாமல் இது போன்ற அறிகுறிகள் தென்படும்போது மருத்துவரை அணுக வேண்டும்.
மாரடைப்பின் அபாயத்தை குறைப்பதற்கான சில வழிமுறைகள் :
★ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
★புகைப்பிடித்தலை கைவிட வேண்டும்.
★ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.
★எடை கட்டுப்பாட்டினை பின்பற்ற வேண்டும்
★தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
★உடலின் கொழுப்பு அளவை கட்டுப்படுத்த வேண்டும்.
★மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் மோசமான விளைவுகளில் இருந்து உடலை பாதுகாக்க இயலும்.