#BREAKING : நடிகர் விஜய் மீது போலிஸில் புகார்.. வாக்குச்சாவடியில் அத்துமீறல்.?!
ஊரடங்கு சமயத்தில் எளிமையாக ரகசிய திருமணம் நடைபெற்றதா.? வைரலாகும் யாஷிகாவும் புகைப்படம்.! யாஷிகா விளக்கம்.!
ஊரடங்கு சமயத்தில் எளிமையாக ரகசிய திருமணம் நடைபெற்றதா.? வைரலாகும் யாஷிகாவும் புகைப்படம்.! யாஷிகா விளக்கம்.!
நடிகை யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமான இவர் தற்போது தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ந்த வரலட்சுமி நோன்பை முன்னிட்டு யாஷிகா சேலை கட்டி, நெற்றி வகிடில் பொட்டு வைத்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பொதுவாக திருமணம் முடிந்த பெண்கள் மட்டுமே நெற்றி வகிடில் பொட்டு வைப்பது வழக்கம் என்பதால் யாஷிகாவின் இந்த செயலை பார்த்து அவருக்கு திருமணம் முடிந்துவிட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
யாஷிகா தொழிலதிபர் ஒருவரை டேட்டிங் செய்து வருவதாக அவ்வப்போது வதந்திகள் சமூக வலைதளங்களில் பதிவாகி வரும் நிலையில், இந்த புகைப்படம் அதை மேலும் உறுதி செய்வதாக அமைந்தது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள யாஷிகா, அது போட்டோ ஷூட்டிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனவும் பதிலளித்துள்ளார்.