ஸ்டாலின் முதல்வராக வேண்டும்! இரத்தம் சொட்ட, சொட்ட துடிதுடித்து இளம்பெண் நிறைவேற்றிய நேர்த்திக்கடன்!!

ஸ்டாலின் முதல்வராக வேண்டும்! இரத்தம் சொட்ட, சொட்ட துடிதுடித்து இளம்பெண் நிறைவேற்றிய நேர்த்திக்கடன்!!



woman-cut-her-tongue-after-victory-of-stalin

மு.க.ஸ்டாலின் முதல்வரானால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக பெண் ஒருவர் வேண்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்று தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் ஸ்டாலின் வெற்றி பெற்று வரும் 7ம் தேதி முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா என்ற பெண் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வரானால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டியுள்ளார்.

stalin

அதன்படி இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலின் முன்பு தனது நாக்கினை கத்தியால் அறுத்து உண்டியலில் போட்டு விட எண்ணி தனது நாக்கை அறுத்துக் கொண்டார். இந்நிலையில் கோவில் திறக்காததால் நாக்கினை வாசல்படியில் வைத்துவிட்டு அங்கு ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை பொதுமக்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.