விஜயகாந்த் இப்படிப்பட்ட குணம் உடையவரா.. உண்மையை வெளிப்படையாக கூறிய பிரபலம்.!



Vijayakandh pro openup about vijayakandh

விஜயகாந்த் என்றாலே கேப்டன் என்று ரசிகர்கள் கூறுவார்கள். அவர் நடித்த படங்கள் மூலமாக மட்டுமல்லாமல் அவர் செய்த உதவிகள் மூலமும் அவரை மக்களுக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாக விஜயகாந்தை தேடிச் செல்லும் யாரும் சாப்பிடாமல் திரும்பி வரமுடியாது என்று கூறுவார்கள்.

Vijayakandh

அப்படி அனைவருடைய பசியையும் போக்கியவர், பல பிரபலங்களின் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்துள்ளார். பொதுவாக திரையுலகில் எப்படிப்பட்டவராக இருந்தாலும் ஒரு எதிர்மறை விமர்சனம் இருக்கும். ஆனால் விஜயகாந்துக்கு அப்படி எந்த விமர்சனமும் இல்லை என்று கூறலாம்.

தன்னுடன் வேலை செய்யும் சாதாரண ஊழியரைக் கூட என்ன பண்றீங்க? சாப்பிட்டீங்களா? உங்க வீட்டில் எத்தனை பேர்? என்று அனைவரிடமும் விசாரித்து சாப்பிட வைத்து அனுப்புவார். எம் ஜி ஆரிடம் மட்டுமே இந்த குணம் இருந்தது. அடுத்ததாக விஜயகாந்திடம் தான் இந்த குணம் உண்டு.

Vijayakandh

மேலும் இப்ராஹிம் ராவுத்தரை தனது தாய், தகப்பனாக விஜயகாந்த் பார்த்துள்ளார். அவருக்கு ஒன்று என்றால் துடித்து விடுவார். ராவுத்தருக்கு எல்லாமே செய்து கொடுப்பார். தனக்கு உதவிய ராவுத்தரை மறக்காமல் கூடவே வைத்துப் பார்த்துக் கொண்டார் விஜயகாந்த்" என்று ஏவிஎம் பிஆர்ஓ துளசி பழனிவேல் கூறியுள்ளார்.