அய்யோ..! சிரிப்பு செத்துவிட்டதே!.. கண்ணீர் மல்க கவிஞர் வைரமுத்து.!

அய்யோ..! சிரிப்பு செத்துவிட்டதே!.. கண்ணீர் மல்க கவிஞர் வைரமுத்து.!



vairamuthu talk about vivek

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விவேக்குக்கு இதய செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார். நடிகர் விவேக்கின் மறைவிற்கு  நடிகர், நடிகைகள், திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் விவேக் மறைவு குறித்து வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!.. எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன், அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!.. திரையில் இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடுமே! மனிதர்கள் மட்டுமல்ல விவேக்! நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன. கலைச் சரித்திரம் சொல்லும் : நீ ‘காமெடி’க்  கதாநாயகன்." என பதிவிட்டுள்ளார்.