எங்கு சென்றாலும் தனது பெயரை நிலைநாட்டும் இந்திய கிரிக்கெட் வீரர், அப்படி என்னதான் நடந்தது.

எங்கு சென்றாலும் தனது பெயரை நிலைநாட்டும் இந்திய கிரிக்கெட் வீரர், அப்படி என்னதான் நடந்தது.



thanathu-payarai-nelainattum-cricket-player

தற்சமயம் தமிழகத்தில் மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்று   கொண்டிருக்ககூடிய ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த  நிகழ்ச்சி தமிழகத்தில் தொடங்குவதற்கு முன்பே ஹிந்தியில் ஆரம்பித்துவிட்டார்கள். அங்கே பிரபலமாக இருந்ததால் தான் இங்கு  தொடங்கப்பட்டது.  தற்போது அங்கு பிக்பாஸ் - 12 வது சீசன்   நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

 

இந்த சீசனுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.  அவர் கிரிக்கெட் சூதாட்ட குற்றச்சாட்டில் தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  அவர் விளையாடக்கூடிய காலகட்டங்களில் பார்த்தீர்களானால் மிகவும்  ஆக்ரோஷமாக  செயல்படக்கூடியவர். பந்துவீச்சில் தனது திறமையை வெளிப்படுத்துவாரோ  இல்லையோ ஆனால் தனது கோபத்தையும் ஆத்திரத்தையும் தனது செயல் வடிவில் காட்டக்கூடியவர்.

Tamil Spark

அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேர்ந்த இரண்டாவது நாளே சக போட்டியாளர்களுடன் சண்டையிட்டுள்ளார்.  மேலும் அவர்களை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியும் பேசி உள்ளார்.  அதன் பின் அவர் வேறு ரூமுக்கு சென்று மைக்கை கழற்றி வைத்துவிட்டாராம். மேலும் கதவை திறங்க நான் வெளியே போகிறேன் என கேட்டுள்ளார்.  இன்னும் பல நாட்கள் நிகழக்கூடிய இந்த நிகழ்ச்சியில் இவர் எவ்வளவு நாள் தாக்குப் பிடிப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


.