கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
பாவம் மனுஷன்... நடுராத்திரியில் கதறி அழுத நடிகர் சூர்யா! அவரே கூறிய காரணம்...

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள நடிகர் சூர்யா, அவரது குடும்பத்தை பற்றிய பாசத்தையும் அன்பையும் அடிக்கடி பேட்டி வாயிலாக வெளிப்படுத்தி வருகிறார். எங்கு பேசினாலும், தனது மனைவி ஜோதிகாவை பற்றிய பாராட்டுகளைச் சொல்ல தவறாதவர். காதலாகத் தொடங்கிய வாழ்க்கை:
சிவகுமாரின் மகனாக சினிமாவில் அறிமுகமான சூர்யா நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்தார். அதன் பிறகு வந்த பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம் அவருக்கும் ஜோதிகாவுக்கும் இடையே காதல் மலரச் செய்தது. இந்தக் காதல், 2006ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகளுடன் அவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது.
இதையும் படிங்க: காதலை பற்றி நடிகை த்ரிஷா ஓபன்டாக்!! நாங்க இருவரும் சேர்ந்த ரொம்ப ஸ்பெஷல்....
குடும்பத்துக்காக எடுத்த முடிவுகள்:
திருமணத்திற்கு பிறகு சினிமாவை தற்காலிகமாக விலகிய ஜோதிகா, தற்போது மீண்டும் நடிப்பில் பிஸியாக இருக்கிறார். பிள்ளைகளின் கல்விக்காக சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்தோடு மும்பையில் செட்டிலாகிவிட்டனர் என்றாலும், ஜோதிகா தொடர்ந்து பாலிவுட் வாய்ப்புகளை ஏற்கும் நிலையில் உள்ளார்.
ரெட்ரோ – திரைப்படம்:
மே 1ஆம் தேதி வெளியான சூர்யாவின் புதிய திரைப்படம் ரெட்ரோ, கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், சூர்யா அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் மின்னியுள்ளார். பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தொடர்ந்து தோல்வி படங்களை சந்தித்த சூர்யாவுக்கு இந்த படம் ஒரு நம்பிக்கையை வழங்கியுள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
மனதை உருக்கிய ஒரு மெசேஜ்:
ரெட்ரோ ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா ஒரு உணர்ச்சிவசப்பட்ட தருணத்தை பகிர்ந்துகொண்டார். சமீபத்தில் அவர் அதிகம் கேட்ட பாடல் சித்தா படத்தில் இடம்பெற்ற "என் பார்வை உன்னோடு" என்ற பாடல் என கூறினார். இந்தப் பாடலுடன் அவர் தனிப்பட்ட உணர்வுகளை இணைத்திருந்தார்.
அவரது மகள் தியா மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற நிலையில் அந்தப் பாடலை கேட்டுக் கொண்டிருந்த அவர் ஒரு இரவு 3 மணிக்கு தியாவிடமிருந்து வந்த மெசேஜை பார்த்துவிட்டு மிகவும் எமோஷனலாகி கதறி அழுததாகக் கூறினார். இந்த நிகழ்வு இசை எவ்வளவு ஆழமான நினைவுகளையும் உணர்வுகளையும் கொண்டுவரும் என்பதை உணர்த்துகிறது.
இதையும் படிங்க: ஒற்றை ரோஜா போல் இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.....