பிரபல இயக்குனரை அந்த வார்த்தை கூறி திட்டிய கமலஹாசன்.. உண்மையை உடைத்த கே.எஸ் ரவிக்குமார்.?

கமல், ரஜினி என்றாலே நம் நினைவுக்கு வருவது இருவரும் போட்டியாளர்கள் என்பதுதான். ஆனால் முன்பு இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் பல ஹிட்களை கொடுத்தது என்பது பலரும் அறிந்ததே. அப்படி நண்பர்களாக இருந்தவர்கள் சில காரணங்களால் தனித்தனியே படம் நடிக்க ஆரம்பித்தனர். அந்த காலத்தில் ரஜினியை விட கமல் தான் அதிக சம்பளம் வாங்கியுள்ளார்.
ரஜினியின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான படம் என்றால் கே எஸ் ரவிக்குமார் அவர்கள் தயாரித்து வெளிவந்த படம் 'படையப்பா'. அதில் ரம்யா கிருஷ்ணன், சிவாஜி கணேசன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த கே.எஸ் ரவிக்குமார், அவர்களின் 'படையப்பா' திரைப்படம் 4 மணி நேர படமாகவும் அதில் இரண்டு இடைவேளை விடுவதாக முடிவு செய்து இருந்ததாகவும் கூறினார்.
இவர்களது இந்த முடிவை அறிந்த கமல் கே. எஸ் ரவிகுமாரிடம் "நீ என்ன பைத்தியமா இது ஹிந்தி படத்திற்கு ஒத்துவருமே தவிர தமிழ் திரையுலகிற்கு ஒத்து வராது" என்று கூறியிருக்கிறார். அவர் அறிவுறுத்தலின்படி மாற்றி நடந்ததே படையப்பா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என கே .எஸ். ரவிக்குமார் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.