என்னது.. பணத்திற்காகவா.! நிக்கோலை திருமணம் செய்ய காரணம் இதுதான்.! ஓப்பனாக உடைத்த நடிகை வரலட்சுமி!!
ராஷ்மிகா மந்தானா, நயன்தாராவையே மிஞ்சிடுவாங்க போலையே.. ஏன் தெரியுமா.?
ராஷ்மிகா மந்தானா, நயன்தாராவையே மிஞ்சிடுவாங்க போலையே.. ஏன் தெரியுமா.?
2016ம் ஆண்டு "க்ரிக் பார்ட்டி" என்ற கன்னடத் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து அஞ்சனி புத்ரா, சமக் ஆகிய கன்னடப் படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தெலுங்கில் நாக சவுரியா ஜோடியாக "சலோ" படத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த "கீதா கோவிந்தம்" திரைப்படம் ராஷ்மிகாவிற்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடப்படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா தமிழில் சுல்தான் படத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து விஜயின் "வாரிசு" படத்திலும் நடித்துள்ளார். இதையடுத்து தற்போது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூருடன் "அனிமல்" படத்தில் நடித்துள்ளார். தந்தை, மகன் பாசத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் உருவாகியுள்ளது.
இப்படத்தில் நடித்ததற்காக ராஷ்மிகாவுக்கு 7கோடி சம்பளமாகக் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இவர் ஒரு படத்திற்கு 3கோடி வரை சம்பளம் பெறுவார் என்றும், தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற அந்தஸ்த்தைப் பெற்றுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.