ஐஸ்வர்யாவால் தனத்தின் உடல்நலப்பிரச்சனையை அறிந்த குடும்பம்; மூர்த்தியின் நெஞ்சில் இடியாய் இறங்கிய செய்தி..!

ஐஸ்வர்யாவால் தனத்தின் உடல்நலப்பிரச்சனையை அறிந்த குடும்பம்; மூர்த்தியின் நெஞ்சில் இடியாய் இறங்கிய செய்தி..!



pandian-stores-family-know-dhanam-behind-medical-treatm

 

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக அண்ணன்-தம்பிகளின் பாசபந்தத்தை எடுத்துரைக்கும் பொருட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நெடுந்தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த நெடுந்தொடரில் சுஜிதா, ஹேமா குமார், வெங்கட் ரங்கநாதன், குமரன் தியாகராஜன், காவ்யா அறிவுமணி, சாந்தி வில்லியம்ஸ், சரவணா விக்ரம், மீனா செல்லமுத்து உட்பட பலரும் நடித்து வருகின்றனர். 

தற்போது பாண்டியன்ஸ் ஸ்டோர்ஸ் இல்லத்தின் அனைவரும் புதுவீட்டில் குடியேறி மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர். ஆனால், சிலருக்கு மட்டுமே தெரியவந்த தனத்தின் மார்பக புற்றுநோய் தொடர்பான பிரச்சனை எப்போது குடும்பத்தினருக்கு தெரியவரும் என்ற எதிர்பார்ப்பும், அவருக்கு சிகிச்சை எப்போது தொடங்கும் என்றும் காத்திருந்தனர்.

pandian stores

இந்நிலையில், ஐஸ்வர்யா எப்போதும் தனது யூடியூப் பக்கத்தில் சர்ச்சைக்குள் சிக்கி கண்ணனையும் படாதபாடுபடுத்தும் நிலையில், தற்போது தனத்தின் பிரச்சனையையும் மேற்கோளிட்டு நபரை குறிப்பிடாமல் வீடியோ பதிவு செய்துள்ளார். இதனை கண்ட மீனாவின் குடும்பத்தினர், முல்லையில் குடும்பத்தினர் மற்றும் தனத்தின் குடும்பத்தினர் அனைவரும் பதற்றத்துடன் வீட்டிற்கு வந்துள்ளனர். 

அங்கு ஐஸ்வர்யா உட்பட குடும்பத்தினரிடம் உண்மையை கேட்க, விபரம் அறிந்த குடும்பத்தினர் யாரும் உண்மையை சொல்லவில்லை. ஆனால், ஐஸ்வர்யாவோ உண்மையை போட்டுடைக்கிறார். இந்த அதிர்ச்சி சம்பவம் குடும்பத்தினருக்கு தெரியவந்துவிட்டதால், இனி வரும் நாட்கள் நெடுந்தொடர் பரபரப்பாகும் என எதிர்பார்க்கபடுகிறது.