தாடி பாலாஜி இப்படிப்பட்டவரா? உண்மையை போட்டுடைத்து அதிர்ச்சியை ஏற்படுத்திய செய்தி வாசிப்பாளர்.!
தாடி பாலாஜி இப்படிப்பட்டவரா? உண்மையை போட்டுடைத்து அதிர்ச்சியை ஏற்படுத்திய செய்தி வாசிப்பாளர்.!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், பிரபலதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிக்கு நடுவராகவும் இருப்பவர் தாடி பாலாஜி. இவர் சமீபத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்..
இவர் தனது மனைவியை, கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். மேலும் கடந்த வருடங்களில் தாடி பாலாஜியின் மீது பல தவறான விமர்சனங்கள் எழுந்தது. பின்னர் நாளடைவில் அந்த விமர்சனங்கள் மாறியது.
இந்நிலையில் அவரை பற்றி பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் காயத்ரி கிஷோர் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் .
அதில் காயத்திரி, சொந்த ஊருக்கு காரில் குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது உளுந்தூர்பேட்டை அருகே உள்ள, ஒரு ஹோட்டலில் சாப்பிட இறங்கியுள்ளனர். பின்னர் டிரைவர் காரை ஸ்டார்ட் செய்த போது கார் ஸ்டார்ட் ஆகவில்லை. அப்போது டிரைவர் பக்கத்தில் இருந்த கார் ஓட்டுனரிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார்.
அப்போது அந்த காரில் தாடி பாலாஜி இருந்துள்ளார்.அவரது டிரைவர் தகவலளித்துவிட்டு கிளம்பிவிட்டார். பின்னர் அங்கு மீண்டும் வந்த தாடி பாலாஜி என்ன பிரச்சனை ஏதாவது உதவி வேண்டுமா தன்னுடைய கார் டிரைவரிடம் கேட்டார். ஒரு சக மனிதராக என்ன பிரச்சனை? உதவி வேண்டுமா? என அவரே கேட்டு உதவி செய்தார்.பல பிரச்சினைகளை தாண்டி அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அன்பாக இருப்பது போல் நடிக்கிறார் என்று நினைத்தேன். ஆனால் இப்பொழுது அவருடைய உண்மையான குணம் எனக்கு தெரியவந்தது என காயத்ரி கூறியுள்ளார்.