நடிகைக்காக படப்பிடிப்பில் சண்டை போட்ட விஜய்.? என்ன காரணம்.!?

நடிகைக்காக படப்பிடிப்பில் சண்டை போட்ட விஜய்.? என்ன காரணம்.!?



News about Actor vijays thirumalai movie shooting spot

தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஜய். இவர் தன் நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து 90களில் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ் திரை துறையில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியிருக்கிறார் விஜய். சினிமாவில் மட்டுமல்லாது தற்போது அரசியலிலும் கால் பதித்து வெற்றி நடை போட்டு வருகிறார்.

actress

இவ்வாறு பல்வேறு துறைகளிலும் பிசியாக இருந்து வரும் விஜய் குறித்து பல சுவாரசியமான சம்பவங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ரமணா இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2003 ஆம் வருடம் வெளியான திரைப்படம் திருமலை. இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது.

மேலும் இப்படத்தில் பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளும் நடித்திருந்தனர். இதில் குறிப்பாக பிரபல நடிகை சாந்தி வில்லியம்ஸ் செய்பவர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல யூ ட்யூப் சேனலில் பேட்டியில் கலந்து கொண்ட சாந்தி வில்லியம்ஸ், திருமலை படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவங்களை குறித்து பேசி இருந்தார்.

actress

அதாவது திருமலை படப்பிடிப்பின் போது, " விஜய்க்கு ரூம் மாதிரியான செட் போட்டு கொடுத்திருந்தார்கள். மற்றவர்களுக்கு ரூம் எதுவும் தரவில்லை. எனவே நான் படப்பிடிப்பு முடித்துவிட்டு அசதியில் பெஞ்சில் படுத்து கொண்டிருந்தேன். இதை பார்த்த விஜய் அவரின் அசிஸ்டன்டிடம் சண்டை போட்டு என்னை அவரின் அறைக்குள் சென்று படுக்க சொல்லி இருந்தார். மேலும் இது விஜய்க்கு தொந்தரவாக இருக்கும் என்று நான் மறுத்துவிட்டேன். ஆனால் விஜய் நான் ஷூட்டிங் சென்றால் காலையில் தான் வருவேன். நீங்கள் அதுவரை என் அறையில் படுத்துக் கொள்ளுங்கள்" என்று பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார் என்று மனம் மகிழ்ந்து பேசியிருந்தார்.