கேப்டன் மகனின் படத்திற்கு வந்த சிக்கல்.! தள்ளிப்போன ரிலீஸ் தேதி.! என்ன காரணம்??
திருமணத்தின் போது இப்படியா பன்றது? கண்ணீர் விட்டு உதவி கேட்ட நாகினி மௌனி ராய்! வைரல் வீடியோ இதோ.

பாலிவுட் தொடரான நாகினி தொடர் தமிழில் மொழிபெயர்கப்பட்டு பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதில் நாகினி பாம்பாக நடித்தன் மூலம் தமிழ் மக்களிடயே பிரபலமானவர் மவுனி ராய். அத்தொடரில் அவரது அளவுக்கு மீறிய நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது . இந்நிலையில் மௌனி ராய் கேரளாவை பூர்வீகமாக கொண்ட சூரஜ் நம்பியார் என்ற தொழிலதிபரை காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி இவர்களுது திருமணம் கேரளா முறைப்படி நடந்தது.
அதன் பின் பெங்காலி முறைப்படி நடந்த திருமணத்தில் மௌனி ராயை அவரது சகோதரர்கள் வெற்றிலையை வைத்து அவர் முகத்தை மூடியப்படி ஒரு ஸ்டூல் மீது அமரவைத்து தூக்கி வருகிறார்கள். அப்போது கீழே விழுந்துவிடுவோம் என்ற பயத்தில் அவர் கண்ணீர் விட்டு உதவி கேட்டு கத்தி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.