திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து! 21 பேர் படுகாயம்! கோவையில் பரபரப்பு...



omni-bus-fire-accident-near-coimbatore

திருச்சியிலிருந்து கோவையை நோக்கி வந்த ஒரு தனியார் மின்சார ஆம்னி பேருந்து, பயணிகளுக்கிடையே பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி விபத்தில் சிக்கியது. அந்த பேருந்தில் மொத்தம் 26 பயணிகள் பயணித்தனர். அது கருமத்தம்பட்டி அருகே வந்தபோது, டிரைவர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து சாலை தடுப்புச் சுவரில் மோதி தாறுமாறாக ஓடியது. இவ்விபத்தில் பயணிகள் பலர் காயமடைந்தனர்.

புகைமூட்டம்  தீப்பிழம்பாக மாறியது

விபத்தின் போது, பேருந்தின் பேட்டரியில் இருந்து புகைமூட்டம் வெளியானது. அந்நிலையை உணர்ந்த ஓட்டுநர் பயணிகளை உடனே இறங்கச் சொல்லி, அவசர நடவடிக்கை எடுத்தார். ஆனால், சிலர் விரைவாக இறங்க முடியாததால், அருகே இருந்த லாரி டிரைவர் ரமேஷ் உடன் ஒருவர், பேருந்து கண்ணாடிகளை உடைத்து பயணிகளை மீட்டனர்.

தீ வேகமாக பரவியது

பின்னர், புகைமூட்டம் தீப்பிழம்பாக மாறி, சில நிமிடங்களில் முழு பேருந்தையும் தீ பிடித்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தாலும், பேருந்து முழுமையாக சாம்பலானது.

இதையும் படிங்க: ஆசையாக பீச்சுக்கு சென்ற காதல் ஜோடி! நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! காதலன் மடியிலேயே துடிதுடித்து போன காதலியின் உயிர்! சென்னையில் பரபரப்பு..

21 பேர் காயம் சிகிச்சையில்

இந்த தீ விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த புவனேஸ்வரன் (35), தரணிபதி (65) உள்ளிட்ட 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

 

இதையும் படிங்க: திருமணம் ஆகி 3 மாதம் தான்! தந்தைக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ! காரில் வெளியே சென்ற புதுப்பெண்! கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!