பிரபல முன்னணி இயக்குனர் திடீர் மரணம்! திரையுலக பிரபலங்கள் இரங்கல்!!
பிரபல முன்னணி இயக்குனர் திடீர் மரணம்! திரையுலக பிரபலங்கள் இரங்கல்!!
மலையாள சினிமாவில் ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கியவர் கே.பி.பிள்ளை. ஆரம்பத்தில் 21 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்த அவர் ஓய்வுப்பெற்ற பின்பு மலையாள நாடகங்களை நடத்தினார். பின்னர் 1970-ம் ஆண்டு சினிமா துறையில் கால்பதித்த அவர் துவக்கத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
பின்னர் நகரம் சாகரம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்தார். அதனை தொடர்ந்து அவர் அஷ்டமுடி கயல், பாதிரா சூரியன், பணிதீராத வீடு, பிருந்தாவனம், பிரியசகி ராதா, கதிர் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், 93 வயது நிறைந்த பழம்பெரும் இயக்குனரான அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலமானார். இந்த நிலையில் ஏராளமான திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.